Monday, November 29, 2010

ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

படம் : மேஜர் சந்தரகாந்த்
பாடியது : பி.சுசிலா



ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
உன்னிடம் சொல்லிட நினைத்தும் உள்ளம் உண்மையை மூடி மறைக்கும்
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

No comments: