Tuesday, August 31, 2010

ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி



ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி

எனக்காச்சு மச்சினிச்சு ஒனக்கச்சு
வேணம் இனி வாய் பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்....
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்
பிச்சு பிச்சு தின்னுக்கலாம்..
பழுத்தாச்சு நெஞ்ஜம் பழம் பழுத்தாச்சு
அணில்கிட்ட கொடுத்தாச்சு
அணில் இப்பம் துள்ளி குதிக்கலாம்
அப்பப்பம் பல்லும் பதிக்கலாம்
பசியயும் தூண்டிவிட்டு
பந்திக்கும் வர சொல்லிட்டு
இலைகளை முடி ஓடுரியே
பசிவந்தா கலங்குவ
நீ பாத்திரத்த முழுங்குவ
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி

தடுக்கதே மூடு வந்தா கெடுக்கதே
மஞ்ஜ பூவ மரைக்காதே
தாகம் தான் சும்மா அடங்குமா
தண்ணிக்குள் பந்து ஒரங்குமா
கொஞ்ஜம் கொஞ்ஜம் விட்டு கொடு
குங்குமத்த தொட்டு கொடு
நெருங்காதே பொன்னான்க்கண்ணி வருக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிரா
முத்ததில் மச்சம் பதிக்கிர...
காதலின் சேட்டையடி
கட்டில் மேல் வேட்டையடி
காயங்களும் இங்கே இன்பமடீ....
கட்டிலுக்கு கெட்ட பையன்
நீ ரெட்ட சுழிஉள்ள பையன்
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
நீ சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஏங் காதில் சொல்லிச்சு மானே....

ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
.

Monday, August 30, 2010

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்



ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட...
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...
லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்...
உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு...

Sunday, August 29, 2010

இரவும் நிலவும் வளரட்டுமே

படம் -கர்ணன்
இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்



ஆ ஆ ஆ...
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும் வளரட்டுமே

தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே

இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே

அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே

இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே

நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே
இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே

இரவும் நிலவும் வளரட்டுமே

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே

அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே

நாடகம் முழுவதும் நடக்கட்டுமே

அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும்

வளரட்டுமே..
.

Saturday, August 28, 2010

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

படம் - பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடியவர் - பி. சுசீலா



ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
.

Friday, August 27, 2010

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா

திரைப்படம் : கற்பகம்
பாடியவர் : பி.சுசிலா
இசை : எம்.எஸ்.வி & ராமமூர்த்தி
வரிகள் :வாலி



மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா

கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல் கலங்குவதும் நீயல்லவா

உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு

Thursday, August 26, 2010

நாணமோ.. இன்னும் நாணமோ..

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா



நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..

ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..

நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..

தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது.. வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது..

ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது

ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது இது..

நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..

மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது..

உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது

உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது
அது இது..

நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..

ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
.

Wednesday, August 25, 2010

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்

படம்: உறவாடும் நெஞ்சம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி



பெ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்..

ஆ: மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
பெ: உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

பெ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

பெ: உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ
ஆ: புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஆ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

பெ: மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
ஆ: காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

பெ: ஒரு நாள்..
ஆ: உன்னோடு ஒரு நாள்
பெ: உறவினிலாட..
ஆ: புதுமைகள் காண
ஆ&பெ: காண்போமே எந்நாளும் திருநாள்
.

Tuesday, August 24, 2010

உன்னை கண்டனே முதல் முறை நான்

படம் : பாரிஜாதம்
பாடியவர்க: ஹரி சரண், சுருதி



உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யோ .அச்சம் வருதே
தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யோ ..சீ எனவோ பண்ணினாய் நீயே
உன்னை கண்டனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இன்னுமுள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஒ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்வு இது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
ஐந்தில் சொல்வது கேள் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொனாலே உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஒ காதல் எனை தாக்கிடுதே
செரி தான் எனையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாபிடுதே
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்கே யாரும் இல்லையே
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைதேனே முற்றிலுமாய் தான்
ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
கோயில் உள்ளே கண் மூடி நின்றாய்
உன் உருவம் தானே என்னாளுமே முகில் தோன்றுமே
நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்
நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்
கடவுள் நிலையாய் நம் கண்ணிலே காட்டு ம் காதல்
உன்னை கண்டேனே முதல் முறைநான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே
என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யோ .
அச்சம் வருதே
தப்பிசெல்லவே வழிகழ் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யோ
சீ என்னவோ பண்ணினாய் நீயே

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இன்னுமுள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஒ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்வு இது
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது
ஐந்தில் சொல்வது கேள் பெண்ணே
ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன் பேர் சொனாலே உள்ளே தித்திக்குமே
மனசுக்குள் ஏனோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் எதோ ஜல் ஜல்
இது சரி தான நீ சொல் சொல்
.

Monday, August 23, 2010

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..

படம்: நீதானா அந்தக் குயில்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா,சித்ரா



பெ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
ஆ: மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
பெ: சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
ஆ: கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..

பெ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
...

ஆ: பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
பெ: நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
ஆ: அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
பெ: துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது

ஆ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
...

பெ: ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல
ஆ: வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல
பெ: சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற
ஆ: என்னப் பார்த்து என்ன கேட்ட.. ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு.. மாலை வந்து மாத்துற

பெ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
ஆ: மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
பெ: சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
ஆ: கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..
பெ: பூஜைக்கேத்த பூவிது
ஆ: நேத்துத்தான பூத்தது
பெ: பூத்தது.. யாரத பாத்தது

.

Sunday, August 22, 2010

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்

படம்: மூன்று முகம்
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்



ஆ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...

ஆ: இதம் பதம் சுகமாகலாம்.. இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தவம் இனியேதடி.. மனம் தினம் உனது மடியில்
பெ: இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்

ஆ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
பெ: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
ஆ: எவ்ரிபடி..
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...

ஆ: ஷாபரபரிபரப...
பெ: பாபாபா..
...

பெ: தளர் நடை தடுமாறுதே.. தளிர் இடை தழுவத் தழுவ
தணல் சுடும் நிலையானதே.. விரல் நகம் பதியப் பதிய
ஆ: மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே

பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
ஆ: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
பெ: துறவறம் என்ன சுகம் தரும்
ஆ: என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்.. கமான்..
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா

.

Saturday, August 21, 2010

காக்கிச் சட்டை போட்ட மச்சான்

படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.பி.ஷைலஜா



ஆ: ஏஹே.. ஏஹே..
பெ: ஏஹே.. ஏஹே..
...
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
ஒங்க வீட்டுத் திண்ணையில அதுக்குத்தானே குத்த வச்சான்
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
...

பெ: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்ல
ஆ: ஆத்துக்கு வடக்க ஐயப்பந்தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே.. ஏஹே.. ஏஹே..
பெ: ஹே.. தோப்புக்குள்ள சத்தமிருக்கு.. ஆமா.. நெஞ்சில் அச்சமிருக்கு
ஆ: மானே என்ன அச்சம் ஒனக்கு.. மாமன் கிட்ட மச்சமிருக்கு

பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
ஆ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...

ஆ: விளக்கை அணைச்சா விவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லே
பெ: ஒத்திகை இங்கே உண்மையா போனா
கல்யாணம் நடத்தும் நம்ம புள்ள.. ஏஹே.. ஏஹே..
ஆ: ஏய்.. இன்னும் என்னை நம்பவில்லையா
பெ: ம்ஹும்..
ஆ: கன்னம் தர எண்ணமில்லையா
பெ: தாலி இன்னும் செய்யவில்லையா.. சேதி சொல்லத் தேதி சொல்லய்யா

ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: ஆ.. கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
ஆ: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
பெ: எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்

Friday, August 20, 2010

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி



பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

ஆ: காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூவேலைகள்.. உன் மேனியில் பூஞ்சோலைகள்
பெ: அந்திப்பூ விரியும்.. அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு கனியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்

ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

பெ:ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ஆ: லாலா லாலலாலா.. லாலலால லாலா..
பெ: தன்னோடுதான் போராடினாள்.. வேர்வைகளில் நீராடினாள்
ஆ: லாராரரா.. ராராரரா.. ராராரரா.. ராராரரா..
அன்பே ஆடை கொடு.. எனை அனுதினம் அள்ளிச் சூடி விடு
பெ: இதழில் இதழால் ஒரு கடிதம் எழுது.. ஒரு பேதை உறங்கிட மடி கொடு

ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
பெ: மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
ஆ&பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...
.

Thursday, August 19, 2010

சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல

படம்: மலையூர் மம்பட்டியான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி



ஆ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
எங்கே மாராப்பு.. மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
பெ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு.. அருகே நீ வா.. வேணாம் வீராப்பு
...

பெ: நீர் போகும் வழியோடுதான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால
ஆ: வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது
பெ: புது வெள்ளம் சேரும்போது வழியென்ன பாதையென்ன
காத்தாகி வீசும்போது திசையென்ன தேசம் என்ன
ஆ: மனசத் தாழ்போட்டு மயிலே நீ போ.. வேணாம் விளையாட்டு
பெ: ஆஹ்ஹா.. சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு..
ஆ: மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
...

பெ: ஓஹோஹோஹோ.. ஓஓஹோஹோ ஹோஹோ..
ஓ ஓஓஓ ஓ ஓஓஓ..
...

ஆ: என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல
என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல
பெ: நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்னை நம்பித்தானே ஒளிச்சு வச்சேன்
ஆ: பொல்லாப்பு வேணாம் புள்ள.. பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்கப் பாயும் இல்லை.. நீ வந்தா நியாயம் இல்ல
பெ: வேணாம் கூப்பாடு.. அருகே நீ வா.. ரோசாப் பூச்சூடு..

ஆ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
பெ: நாநா நாநாநா.. லாலா லா லா.. லாலா லாலாலா

.

Wednesday, August 18, 2010

ஓஒ...தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்.. கேட்டாலும் போதும்

படம்: உல்லாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி



பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
...

பெ: செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு
செந்தூரப் பொட்டும் வச்சு சேலாடும் கரையும் நின்றேன்
பாராட்ட வா.. சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு.. மோகம் தீருமே
பெ.குழு: ஏஏ.. ஓஓ..

பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
...

பெ: தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு
தாலாட்டத் தென்றல் உண்டு.. தாளாத ஆசை உண்டு
பூ மஞ்சமும் தேன் கிண்ணமும்
நீ தேடி வா.. ஒரே ராகம் பாடியாடுவோமா
பெ.குழு: ஏஏ.. ஓஓ..

பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
.

Tuesday, August 17, 2010

விழிகளின் அருகினில் வானம்...



விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

Monday, August 16, 2010

மலர்களே மலர்களே இது என்ன கனவா




மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் , பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான் , மண்ணோடும் நீதான்
கண் னோடும் நீதான் , வா ..ஆ .....ஆ

(மலர்களே )

மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா ..?
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா ?
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா ?
நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில் , உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா

(மலர்களே )

பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே இணைந்து கொண்டது இந்த உறவு
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம் , மரிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா

(மலர்களே)
.

Sunday, August 15, 2010

கப்பலேறிப் போயாச்சு...

!! அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் !!



கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்
உதிரம் மதியாய் நீராடினோம்
வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா

நம்ம வாசல் தேடி சாரல் வரும்
இது வானம் தூவும் தூறல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம்
கண்களால் கன்னத்தில் போட
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்
இங்கு நீ அங்கு நான் போராட
உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
நானோர் தீவாய் ஆனேன் வா வா
அம்மம்மா நாளெல்லாம் காதல் நீரைக் குடித்தேன்

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

லாலா லாலா லாலலலா
லாலா லாலா லாலலலா
லாலா லாலா லலலாலாலா

அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்
மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு
உன்னில் என்னைக் கரைப்பேன்

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்
உதிரம் மதியாய் நீராடினோம்

வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா
நம்ம வாசல் தேடி சாரல் வரும்
இது வானம் தூவும் தூறல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

Saturday, August 14, 2010

ஒரு முறை இருமுறை பலமுறை கேட்டபின்

படம் :களவாணி
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்தரா, மதுமிதா,மான்சி
இசை : S.S. குமரன்



ஆண்:
ஒரு முறை இருமுறை பலமுறை கேட்டபின்
இதயத்தின் கிளையினில் கூத்தாட
அடிமுதல் நுனிவரை இவளது நினைவுகள்
ஆஹா அழகாய்த் தொலைந்தேனே

குழு:
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா

பெண்:
சி சின்னச் சின்னத்தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே
முத்தமிடும் மாயம் என்ன என்ன
சொல்லிக் கொடுடா
கத்தியின்றி இரத்தம்மின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பமென்று சொல்லிக் கொடுடா

ஆண்:
மேகம் போலே நான் மேலே பறப்பேன்
வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்
காதல் தீண்டி நான் உன்னைப் பார்த்தேன்
நாளும் தாண்டி உன் கண்ணைப் பார்த்தேன்

குழு:
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா

ஆண்:
கொலுசுக்குள் வந்துவிடவா
நடக்கையில் சத்தமிடவா
உன் பாதம் தீண்டிக்கிடப்பேனே உயிரே…
கம்மலினில் தொங்கிவிடவா
அங்கேயேத் தங்கிவிடவா
உன் கண்ணம் தீண்டிக்கிடப்பேனே கிளியே…

பெண்:
குறும்பாலே ஜெயித்தானே
களவாடிக் கவிழ்த்தானே
கனவாலே என்னைக் கொள்கின்றான்…
கண்ணாலே இழுத்தானே
குறும்பாட்டைப் பிடித்தானே
அய்யய்யோ என்னைக் கொள்கின்றான்…

குழு:
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா
டொம்ம டொம்மா டெம்ம டொம்ம டொம்மா
டொம்ம டொம்மா டொம்மடா டொம்மா
.

Friday, August 13, 2010

ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பென்னி தயால், கல்யாணி மேனன்
வரிகள்: தாமரை



ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒஹோ

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன் ஓஹோ
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை ஓஹோ
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணைச் சேரானு
புல்லாங்குழல் பூந்துகையான நின் அழகே
நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
.

Thursday, August 12, 2010

நேத்து ராத்திரி யம்மா.....

படம் : சகலகலாவல்லவன்
இசை: இசைஞானி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி



ஆ : நேத்து ராத்திரி பெ: யம்மா.....
ஆ: தூக்கம் போச்சுதடி பெ: யம்மா.....
ஆ: ஆவோஜி ஆவ் அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி
அம்மாடி ஆத்தாடி உன்னால தான் (நேத்து

பெ: அச்சாரத்தைப் போடு கச்சேரியைக் கேளு
சின்ன உடல் சிலுக்கு ஜில்லுனுதான் இருக்கு
சந்தனத்தில் பண்ணி வெச்ச தேரு
ஆ: கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபூல் ராஜா
என் பேருதான் அப்துல் காஜா என் கிட்டேதான்
அன்பே ஆஷா அஞ்சு விரல் பட்டவுடன்
அஞ்சுகத்தைத் தொட்டவுடன் ஆனந்தம் வாரேவா
ஆ: நேத்து ராத்திரி பெ: யம்மா.....
ஆ: தூக்கம் போச்சுதடி பெ:யம்மா......
பெ: அனார்கலி நான்தானய்யா அன்பே சலீம் நீதானய்யா
அம்மாடி ஆத்தாடி உன்னால தான் (நேத்து

ஆ: என்னோடு வா துபாய் ஏராளந்தான் ருபாய்
ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு
உன்னை நானும் வெச்சிருப்பேன் அன்பாய்
பெ: உன்மேல தான் ஆசைப்பட்டேன்
உன்னைக் கண்டு நாலும் விட்டேன்
குபேரன் உன் பையைத் தொட்டேன்
குசேலனின் கையைவிட்டேன்
அந்தப்புரம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன்
ஆசைகள் அப்பப்பா (நேத்து
.

Wednesday, August 11, 2010

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

திரைப்படம் : குரு
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம் ஜானகி
பாடல் : கண்ணதாசன்
இசை : இளையராஜா



பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா

தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி இடை சொல்லவா
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

இடையொரு கொடி இதழொரு கனி
இன்ப லோகமே உன் கண்கள்தானடி
மலரெனும் முகம் அணைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி
நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
பபபபபா பபபபபபாபா

புதுமழையிது சுவைதருமது
வைரப் பூச்சரம் அது இதழில் வந்தது
இனியது இது கனிந்தது அது
இளமையென்பது உன் உடலில் உள்ளது
நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
பபபபபா பபபபபபாபா

நவமணி ரதம் நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்
கவிதைகள் தரும் கலையுந்தன்வசம்
கங்கையாறுபோல் இனி பொங்குமங்களம்
ஓராயிரம் தேனாறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை

நம் இருவர் கையிலே
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
லாலாலலா லாலாலலா
பபபபபா பபபபபபபா
.

Tuesday, August 10, 2010

கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை

படம் : நிழல் நிஜமாகிறது
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : கண்ணதாசன்



கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ

கம்பன் ஏமாந்தான்

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்

Monday, August 9, 2010

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

படம் : கிராமத்து அத்தியாயம்
இயற்றியவர் : கண்ணதாசன்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி
இசை : இளையராஜா



ல ல ல ல ல ல லா

லா லா ல லா ல லா ல

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையிலே கட்டி கொண்டு ஆடவா
ஹே ஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும்போது

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேக்கவா கையில் உன்ன சேக்கவா
ஊ ஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்
சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிகிட்டு போக போறேன்

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

Sunday, August 8, 2010

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி

பாடல் வரிகள்....
படம் : தர்மயுத்தம்
இசை: இளையராஜா
பாடல்: வல்லபன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி



ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி... உன் தோளிலே...
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
.

Saturday, August 7, 2010

பணம் படைத்தவன் : கண் போன போக்கில்

படம் : பணம் படைத்தவன்

பாடல் : கண்ணதாசன்

பாடியவர் : டி.எம்.எஸ்





kan poana poakkilae kaal poagalaamaa
kaal poana poakkilae manam poagalaamaa
manam poana poakkilae manidhan poagalaamaa
manidhan poana paadhaiyai marandhu poagalaamaa

(kan poana)

nee paarththa paarvaigal kanavoadu poagum
nee sonna vaarththaigal kaatroadu poagum
oor paarththa unmaigal unakkaaga vaazhum
unaraamal poavoarkku udhavaamal poagum

(kan poana)

poyyaana silapaerkku pudhu naagarigam
puriyaadha palapaerkku idhu naagarigam
muraiyaaga vaazhvoarkku edhu naagarigam
munnoargal sonnaargal adhu naagarigam

(kan poana)

thirundhaadha ullangal irundhenna laabam
varundhaadha uruvangal pirandhenna laabam
irundhaalum maraindhaalum paer sollavaendum
ivar poala yaarenru oor sollavaendum

(kan poana)

அக்னி சாட்சி; கனாக்காணும் கண்கள் மெல்ல

பாடல் : கனாக்கானும் கண்கள் மெல்ல

படம் : அக்னி சாட்சி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்





Kana Kaanum Kangal Mella
Urangatho Paadal Solla
Nilakala Megam Ellam
Ula Pogum Neram Kanne
Ula Pogum Neram Kanne

Kumarai Uruvam Kuzhandai Ullam Rendum Onrana Maayam Neeyo
Thalaivan Madiyil Magalin Vadivil Thoongum Seyo
Nodiyil Naal Thoorum Niram Maarum Thevi
Vidai Thaan Kidaikkamal Thadumaarum Kelvi
Vilakku Aetri Vaithaal Kooda
Nizhal Pola Thoondrum Nijame
Nizhal Pola Thoondrum Nijame


Naan Un Nijathai Nesikkiren
Un Nizhalaiyo Poojikiren
Athanal Thaan Un Nizhal Vizhuntha Nilathin Mannai Kooda
En Netriyil Neeru Pol Thiru Neeru Pol Ittuk Kolgiren

Puthiya Kavithai Punaiyum Kuyile Nenjil Undana Kaayam Enna
Ninaivu Alaigal Neruppil Kulikkum Paavam Enna
Kizhakku Velukkamal Irukkathu Vaanam
Vidiyum Naal Parthu Iruppene Naanum
Varungaalam Inbam Enru
Nigazh Kaalam Koorum Kanne
Nigazh Kaalam Koorum Kanne

என் கண்மணி உன் காதலி இளமாங்கனி

திரைப்படம் : சிட்டு குருவி
இசை: இளையராஜா
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் பி சுசீலா கோவை பாபு பாஸ்கர்
பாடலாசிரியர் : வாலி



என் கண்மணி உன் காதலி இளமாங்கனி
உன்னை பார்ததும் சிரிக்கின்றதேசிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

நன்னா சொன்னேள் போங்கோ

என் மன்னவன் உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி.

இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா

ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்

இளமாமயில்

அருகாமையில்

வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று,
அனுபவம் சொல்லவில்லையோ

இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ

என் மன்னவன் உன் காதலன்
என்னை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி

தேனாம்பேட்டை சூப்பர்மாக்கெட் இறங்கு

மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே

அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் அன்று தரவேண்டுமே

இரு தோளிலும் மணமாலைகள்

கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மணி உன் காதலி, இளமாங்கனி,
உன்னைபார்ததும் சிரிக்கின்றதே சிறிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன்
என்னை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி

.

Friday, August 6, 2010

ஓம் நமோ நாராணாய‌

படம்: தசாவதாரம்
பாடியவர்: ஹரிஹரன்
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா




ஓம் நமோ நாராணாய‌
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றால்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அட்ச அட்சரம் பார்க்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது
ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தான்

(கல்லை மட்டும் கண்டால் )

இல்லை என்று சொன்ன போதும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
(இல்லை என்று சொன்னபோதும்.)
வீர சைவர்கள் முன்னால் எங்கள்
ஈர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
(கல்லை மட்டும் கண்டால்..)

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
(நீருக்குள்ளே மூழ்கினாலும்..)
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
.

Thursday, August 5, 2010

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்

படம்: சங்கமம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: ஹரிஹரன், எம். எஸ். விஸ்வநாதன்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்



ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி மழைத்துளி..)
ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
(என் காலுக்கு சலங்கையிட்ட)
நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

(ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

(மழைத்துளி மழைத்துளி...)

ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை
எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌
என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு
கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி மழைத்துளி...)

(ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

(எம். எஸ். விஸ்வநாதன்)
ஆ: தந்தான தந்தானனா..
மழைக்காகத் தான் மேகம் அட கலைக்காகத் தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா
நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்
விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்
விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

.

Wednesday, August 4, 2010

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்..

படம்: மீண்டும் கோகிலா.

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி. ஷைலஜா
இசை: இளையராஜா.
வரிகள்: கண்ணதாசன்.



சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.

உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

.

Tuesday, August 3, 2010

மலர்களில் ஆடும் இளமை புதுமையே

படம் : கல்யாணராமன்
பாடியவர் : எஸ்பி ஷைலஜா
இசை : இளையராஜா
இயற்றியவர் : பஞ்சு அருணாசலம்



மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே....
பூங்காற்றே நீ பாடு...

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை
நெஞ்சுக்குள் தானாடும்
பால்வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்
பொன்வண்ண தேரோடும்
சொர்கத்தின் பக்கத்தை இங்கும் நான் காண
என்றென்றும் உன்னோடும் நாளும் நான் ஆட
கண்டேனே தோழி நீயம்மா

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம்
எண்ணங்கள் போராடும்
நான் இன்று காண்பெதெல்லாம் பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்
இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட
பெண்மானே நாளும் ஏனம்மா

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே....
பூங்காற்றே நீ பாடு...

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

Monday, August 2, 2010

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது

படம் : ஆனந்த கும்மி
பாடியவர்கள் : எஸ் ஜானகி எஸ் பி சைலஜா
இயற்றியவர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா



ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது
ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது
ஒ மைனா மைனா

நிலவெரியும் இரவுகளில்
ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான்
ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி
இவளல்லவா இளவரசி
கிளிஞ்சல்கலே உலையரிசி
இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது
ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது
ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா

இலைகளிலும் கிளைகளிலும்
ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பெயர் எழுதும்
ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை
விதைக்கிறதே சிறு பறவை
வயல்வெளியில் பல கனவை
விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது
ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது
ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
தலிரிது மலரிது தானா?
இது ஒரு தொடர்கதை தானா?
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது
ஒ மைனா மைனா

Sunday, August 1, 2010

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

படம் கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல் வைரமுத்து
பாடியவர் ஏ.ஆர். ரஹ்மான்
இசை ஏ.ஆர். ரஹ்மான்



வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்
(வெள்ளைப் பூக்கள்)

காற்றின் பேரசைவும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மெளனம் போல் இன்பம் தருமோ ஓஓஓஓஒ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ஓஓ
ஆ ஹா ஹா ஹா
(வெள்ளைப் பூக்கள்..)


எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே
(வெள்ளைப் பூக்கள்)

.

நண்பனே எனது உயிர் நண்பனே



நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

(நண்பனே...)
.

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இருமலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
இன்றும் என்றும் கேட்கவேண்டும்
எனது ஆசை...ஹே...ஹேய்

(நண்பனே...)

யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்
யாரும் உன்னை திருடி செல்ல
பார்த்து நிற்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்
எனது மனமும் எனது நினைவும்
உனது வசமே
நமக்கு ஏது பிரித்துப்பார்க்க
இரண்டு மனமே...ஹே..ஹேய்....

(நண்பனே)