Sunday, August 29, 2010

இரவும் நிலவும் வளரட்டுமே

படம் -கர்ணன்
இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்



ஆ ஆ ஆ...
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும் வளரட்டுமே

தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே

இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே

அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே

இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே

நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே
இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே

இரவும் நிலவும் வளரட்டுமே

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே

அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே

நாடகம் முழுவதும் நடக்கட்டுமே

அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும்

வளரட்டுமே..
.

No comments: