Sunday, August 1, 2010

நண்பனே எனது உயிர் நண்பனே



நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

(நண்பனே...)
.

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இருமலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
இன்றும் என்றும் கேட்கவேண்டும்
எனது ஆசை...ஹே...ஹேய்

(நண்பனே...)

யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்
யாரும் உன்னை திருடி செல்ல
பார்த்து நிற்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்
எனது மனமும் எனது நினைவும்
உனது வசமே
நமக்கு ஏது பிரித்துப்பார்க்க
இரண்டு மனமே...ஹே..ஹேய்....

(நண்பனே)

No comments: