Wednesday, August 11, 2010

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

திரைப்படம் : குரு
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம் ஜானகி
பாடல் : கண்ணதாசன்
இசை : இளையராஜா



பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா

தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி இடை சொல்லவா
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

இடையொரு கொடி இதழொரு கனி
இன்ப லோகமே உன் கண்கள்தானடி
மலரெனும் முகம் அணைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி
நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
பபபபபா பபபபபபாபா

புதுமழையிது சுவைதருமது
வைரப் பூச்சரம் அது இதழில் வந்தது
இனியது இது கனிந்தது அது
இளமையென்பது உன் உடலில் உள்ளது
நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
பபபபபா பபபபபபாபா

நவமணி ரதம் நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்
கவிதைகள் தரும் கலையுந்தன்வசம்
கங்கையாறுபோல் இனி பொங்குமங்களம்
ஓராயிரம் தேனாறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை

நம் இருவர் கையிலே
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
லாலாலலா லாலாலலா
பபபபபா பபபபபபபா
.

No comments: