Tuesday, November 23, 2010

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

திரைப்படம்: சாந்தி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்



யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

(யார்)

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ

(யார்)

ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ
ஓ…ஓ…ஓஹோஹோஹொஹோ…

(யார்)
.

1 comment:

logu.. said...

. solla varthaigal illai...