Sunday, September 12, 2010

ஏ ஐய்யாசாமி அட நீ ஆளக்காமி

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வாலி
இசை : இசைஞானி
படம் : வருஷம் 16



ஏ ஐய்யாசாமி அட நீ ஆளக்காமி
யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா

(ஏ ஐய்யாசாமி)

நாணல் பூத்தாடும் நதியின் ஓரம்
நானும் உன்னோடு நடக்கும் நேரம்
சோலைப் பூங்காற்று சிந்துகள் இங்கே பாட
மாலைப் பொன்வெய்யில் மனதினிலாட
தொட்டதத் தொட்டுத் தானாட தோளில் இந்த மானாட
இன்பம் இங்கே உச்சம் என்று கண்டால் கூட மிச்சம் உண்டு

(ஏ ஐய்யாசாமி)

அத்த மக ராசத்திக்கு நெத்திலி மீனு வேணாமா
நித்தம் நித்தம் கொழம்பு வெச்சி நாளும் சிக்கனு ஆமாமா
ஓடம் விட்டு ஆத்துக்குள்ள வலை எரிஞ்சு பாப்போமா
கூடத்துல அத்த மக கையில் கொண்டு சேப்போமா
தந்தனத் தானன தந்தனத் தானன ஏ ஏ ஏ

வாரம் நாலாச்சு முழுசாத் தூங்கி
உறக்கம் போயாச்சு விழியை நீங்கி
நேத்து ராப்போது சந்திரன் வந்த நேரம்
நீயும் இல்லாது மனதினில் பாரம்

(ஏ ஐய்யாசாமி)

No comments: