Monday, September 20, 2010

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

படம் : குழந்தையும் தெய்வமும்
பாடியவர் : பி. சுசுலா
இசை : எம்.எஸ்.வி



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று

நடந்தது எல்லாம் நினைப்பது எல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும்........

பிறந்தவந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது

வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகி சென்றது

குழந்தையும் தெய்வமும்........

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
நம் உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது.....

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
பேசி கலந்துவிட்டால் கோபம் மாறி நேசம் ஆகுது

குழந்தையும் தெய்வமும்........

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவர் ஆனார்
அந்த பெரியவர்கள் கோபத்தினால் சிறியவர் ஆனார்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகள் எல்லாம்
என்றும் கண் எதிரிலே கானுகின்ற தெய்வகள் ஆனார்

குழந்தையும் தெய்வமும்....

No comments: