Saturday, September 18, 2010

பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்

படம் : பகலில் ஒரு இரவு
இசை : இளைராஜா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்




குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்

பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் (2)
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா
செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா

(பொன்னாரம்)

மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
சிரிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க
வா...செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவுதான்

(பொன்னாரம்)

சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
ஆ...பண்பாடு மாறாத தென்பாண்டித் தேனே
காலமெல்லாம் தேனிலவுதான்

(பொன்னாரம்)

No comments: