Thursday, December 16, 2010

கிளிமஞ்சாரோ மலைக் கணிமாஞ்சாறோ

படம் : எந்திரன்
இசை : ரஹ்மான்
வரிகள் : பா. விஜய்
பாடியவர்கள் : சின்மயி, ஜாவித் அலி



கிளிமஞ்சாரோ – மலைக்
கணிமாஞ்சாறோ – கன்னக்
குழிமஞ்சாரோ யாரோ யாரோ

ஆஹா…. அஹா…

மொகஞ்சதாரோ – உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா…. அஹா…

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா…. அஹா…

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத் தங்கச்சியே
யெங்கூடத்தான்இருக்கா
ஆளுயற அலிவ்பழம்
அப்படியே எனக்கா?

ஆக்கக்கோ – அடி கின்னிக்கொழி
அப்பப்போ – யென்னப் பின்னிக்கோடி
இப்பப்போ – முத்தம் எண்ணிக்கோடி

கொடி பச்சையே எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை – ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை

இனிச்சக்கீரே அடிச்சக்கரே
மனச ரெண்டா மடிச்சுக்கிரே

நான் ஊற வைத்தக் கனி
என்னை மெல்ல ஆற வைத்துக் கடி

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் – நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு – ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி என்னவாசியே

என் தோல்குத்தாத பலா – றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில் வாசம் நீ

நூறு கிராம்தான் இடை – உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி – என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

ஆக்கக்கோ – நான் கின்ணிக்கோழி
அப்பப்போ – எண்ணப் பின்னிக்கோ நீ
இப்பப்போ – முத்தம் எண்ணிக்கோ நீ
.

1 comment: