Sunday, December 19, 2010

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்

திரைப்படம்: கரகாட்டக் காரன்
பாடியவர்: இளையராஜா, சித்ரா
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா



இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்த மான்

வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே ஆ..ஆ..ஆ.
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன்விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான் ஆ.. ஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடன் மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் எந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னவனே
.

No comments: