Monday, December 27, 2010

கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: நரேஷ் ஐயர்
வரிகள்: தாமரை



கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா

(கண்ணுக்குள்…..)

நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று
(அன்பே…..)

(கண்ணுக்குள்..)
.

No comments: