Thursday, September 23, 2010

பாட்டும் நானே பாவமும் நானே

படம்: திருவிளையாடல்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கவி கா.மு.ஷெரீப்



பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே

(பாட்டும்)

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ

(பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு

(பாட்டும்)

1 comment:

Annadorai Kannadhasan said...

இது கவியரசு கண்ணதாசனின் பாடல்.. பார்க்க கண்ணதாசனின் பதிலை அவரது கண்ணதாசன் மாத இதழில்