Tuesday, August 10, 2010

கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை

படம் : நிழல் நிஜமாகிறது
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : கண்ணதாசன்



கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ

கம்பன் ஏமாந்தான்

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்

5 comments:

அப்பாதுரை said...

பின்னுறீங்க.. நன்றி

வால்பையன் said...

//ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே//


:(

marimuthu said...

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

marimuthu said...

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

VALLARASAN M said...

மகிழ்ச்சி