Wednesday, August 25, 2010

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்

படம்: உறவாடும் நெஞ்சம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி



பெ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்..

ஆ: மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
பெ: உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

பெ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

பெ: உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ
ஆ: புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஆ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

பெ: மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
ஆ: காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

பெ: ஒரு நாள்..
ஆ: உன்னோடு ஒரு நாள்
பெ: உறவினிலாட..
ஆ: புதுமைகள் காண
ஆ&பெ: காண்போமே எந்நாளும் திருநாள்
.

1 comment:

அம்பிகா said...

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். SPB, ஜானகி குரலுக்காகவும் அழகான வரிகளுக்காகவும்.