Thursday, October 7, 2010

கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ், சித்ரா



ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்..ம்.. ம்.. ம்.. ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்..

கண்ணா வருவாயா..
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்

கண்ணா.. கண்ணா.. கண்ணா..

ஆ.. நீல வானும் நிலமும் நீரும் நீயெனக் காண்கிறேன்
உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்
கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துபோகும் பாற்கடல்
உன்னையிங்கு ஆடை போல ஏற்றுக் கொள்ளும் பூவுடல்
வேறில்லயே ப்ருந்தாவனம்
விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஸ்வர்க்கம் இதுவோ

மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம் ம்.. ம் ம்ம்.. ம்ம் ம்.. ம் ம்ம்..
மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
கொடியிடை ஒடிவடன் முன்னம் மடியிடில் எடுத்திடவா
மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா
இரவு முழுதும் உறவு மழையிலே
இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே

கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்

கண்ணா.. கண்ணா.. கண்ணா..

No comments: