Friday, October 29, 2010

பூந்தளிர் ஆட பொன்மலர் சூட

திரைப்படம் : பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம் எஸ். ஜானகி
பாடல் : பஞ்சு அருணாசலம்



அ..அ..அ
பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ

பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்

பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ

காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே... கோலம் இட்டதே...
தேடிடுதே பெண் காற்றின் ராகம்...

பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

பூமலர் தூவும் பூ மரம் யாவும்
ம் ம் ம்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
அ..அ..அ
பூ விரலாலும் பொன் இதழாலும்
ம் ம் ம்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே எண்ணம் மிஞ்சுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்

No comments: