Saturday, October 9, 2010

பட்டுப் பூவே மெட்டுப் பாடு

படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ, எஸ்.ஜானகி



பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
ஆ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..

கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
காதலன் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளைத் தீட்டு.. சுகக் கொடியேற்று
மன்னவனே.. என் மன்மதனே
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..

மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இந்த வேளையே
மதிமொழி கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர் மழை தூவி அழைக்குது மஞ்சம்
சின்னக் கிளி.. என் செல்லக் கிளி
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே
.

No comments: