Sunday, October 10, 2010

ஆசைய காத்துல தூது விட்டு

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா



ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு

வாசம்.. பூவாசம்.. வாலிபக் காலத்து நேசம்
மாசம்.. தை மாசம்.. மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல.. வந்த வாசத்துல..
நெஞ்சோ பாடுது.. சோடியத் தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு

தேனு.. பூந்தேனு.. தேன்துளி கேட்டது நானு
மானு.. பொன்மானு.. தேயிலை தோட்டத்து மானு
ஓடி வர.. உன்னைத் தேடி வர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசயில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு

No comments: