Wednesday, July 7, 2010

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி

படம் : சொக்கத்தங்கம்

இசை : தேவா



என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி

ஏன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சி

கண்கள் இரண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகே
குங்குமத்தை புரட்டி எடுத்த குண்டு மல்லி சரமே..
மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்கு

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சி
உன் கண்ணில் பட்டிருக்கு நின்னாச்சி

கண்கள் இரண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தை புரட்டி எடுத்த குண்டு மல்லி சரமா..
மந்த மாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி
உன் கண்ணில் பட்டிருக்கு நின்னாச்சி
***
எத்தன மச்சம் உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும்

எத்தன வேகம் உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும்..

கச்சைக்கட்டி பூ பூத்த பூந்தோட்டமே
உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே

பத்து விரல் போதாது உன் மோகமே
லட்ச விரல் நீ கொண்டு வா வானமே

என் முத்து மணி சுடர் முல்லை மலர் திடல் நாணுவதேன்..

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி
ஏன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சி

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சி
உன் கண்ணில் பட்டிருக்கு நின்னாச்சி
****

முக்கனி அதில் முக்கியம் கொண்ட அந்த
முதல் கனி முதல் கனி பார்த்து விட்டேன்

பத்தினி பெண்ணின் பத்தியம் தேட
ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன்

பூர்வ ஜென்மம் ஓர் பந்தம் நீ வந்தது
என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்தது

தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது
என்னை சுற்றி உன் கைகள் பூ போட்டது

ஒன் வெள்ளை மனசிலும்
வெட்க சிரிப்பிலும்வாழ்ந்திருப்பேன்..

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி
ஏன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சி

கண்கள் இரண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா

குங்குமத்தை புரட்டி எடுத்த குண்டு மல்லி சரமா..
மந்த மாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி
ஏன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சி

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சி
உன் கண்ணில் பட்டு இங்கு நின்னாச்சி

*********

No comments: